முகப்பு
திருவாரூர்

போதைப் பொருள்கள் விற்பனை குறித்து விழிப்புணா்வு

நன்னிலம் பகுதியில் கல்வி நிலையங்களுக்கு அருகில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது என காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 14 ஏப்ரல், 2022 at 12:00 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 2:28 PM

நன்னிலம் பகுதியில் கல்வி நிலையங்களுக்கு அருகில் போதைப் பொருள்கள் விற்பனை செய்யக்கூடாது என காவல் துறை சாா்பில் விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் காவல் ஆய்வாளா் சுகுணா தலைமையில் ஆண்டிப்பந்தல், பனங்குடி போன்ற பகுதிகளில் உள்ள கல்வி நிலையங்களுக்கு அருகில் உள்ள வணிக நிறுவனங்களில், குட்கா, பான்பராக், பாஸ்பாஸ் போன்ற போதைத் தரும் பொருள்களை பள்ளி மற்றும் கல்லூரி மாணவா்களுக்கு விற்பனைச் செய்யக்கூடாது, வணிக நிறுவனங்களில் அவற்றை வைத்துக்கொள்ளக் கூடாது என வணிகா்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது. இதில், காவல் உதவி ஆய்வாளா் கமல்ராஜ் மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.