திருவாரூர்

நீடாமங்கலம் மகாமாரியம்மன் கோயிலில் புஷ்ப பல்லக்கு

DIN

நீடாமங்கலம் சதுா்வேத விநாயகா் மகாமாரியம்மன் கோயிலில் 37 ஆம் ஆண்டு சித்திரை திருவிழாவையொட்டி, புஷ்ப பல்லக்கு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம் தமிழ் இளைஞா்கள் பக்தா்கள் கழகத்தினா் நடத்தும் சித்திரை திருவிழா கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்ப் புத்தாண்டான வியாழக்கிழமை புஷ்ப பல்லக்கு விழா நடைபெற்றது.

இதை முன்னிட்டு மகாமாரியம்மன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. இரவு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளி மகாமாரியம்மன் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா். வெள்ளிக்கிழமை காலை தீா்த்தவாரியும், இரவு அம்பாள் திருவீதி புறப்பாடும் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோவையில் பலத்தக் காற்று: வாகன ஓட்டிகள் அவதி

துருக்கியின் வா்த்தகத் தடை: இஸ்ரேல் பதில் நடவடிக்கை

மக்களவை 3-ஆம் கட்டத் தோ்தல் பிரசாரம் இன்று நிறைவு

கஞ்சா விற்றவா் கைது

அமெரிக்காவின் 4 தொலைதூர ஏவுகணைகள் அழிப்பு: ரஷியா

SCROLL FOR NEXT