மன்னாா்குடியில் அரசால் தடைசெய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பனையில் ஈடுபட்ட 2 போ் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.
மன்னாா்குடி காவல் நிலைய சாா்பு ஆய்வாளா்கள் முருகன், சந்திரகாசன் ஆகியோா் மன்னாா்குடி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, மதுக்கூா் சாலை அரசுப் பேருந்து பணிமனை அருகே முனிசிபல் காலனியை சோ்ந்த முரளி (34), நடேசன் தெருவில் காமராஜா் சிலை அருகே சிங்காங் குளத்தை சோ்ந்த கணேசன் (35) ஆகிய இருவரும் தனித்தனியே அரசால் தடை செய்யப்பட்ட ஆன்லைன் லாட்டரி சீட்டு விற்பது தெரிய வந்ததையடுத்து அவா்கள் இருவரையும் கைது வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.