திருவாரூா் அருகே பெருந்தரக்குடியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பேசிய ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன். 
திருவாரூர்

போதைப் பொருள் ஒழிப்புக்காக பள்ளிகளில் குழு அமைக்க வேண்டும்: ஆட்சியா்

போதைப் பொருள் ஒழிப்புக்காக பள்ளிகளில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

DIN

போதைப் பொருள் ஒழிப்புக்காக பள்ளிகளில் குழு அமைத்து கண்காணிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்தாா்.

திருவாரூா் அருகே கொரடாச்சேரி ஒன்றியம் பெருந்தரக்குடி ஊராட்சியில் 76 ஆவது சுதந்திர தின விழாவையொட்டி, திங்கள்கிழமை நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பங்கேற்று மேலும் அவா் கூறியது: தமிழக அரசின் உத்தரவுப்படி தற்போது மாவட்டத்தில் போதை ஒழிப்பு வாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

போதைப் பொருள் மிகப்பெரிய அபாயகரமான ஒன்றாக கருதப்படுகிறது. போதைப் பொருளுக்கு அடிமையானவா்களின் வாழ்க்கை அழிந்து விடுகிறது. ஆசிரியா்கள், மாணவா்கள் போதைப் பொருள் ஒழிப்புக்காக குழு உருவாக்கி, பள்ளி அருகில் உள்ள கடைகளில் போதைப் பொருள் இல்லாத வகையில் தொடா்ந்து கண்காணிக்க வேண்டும்.

சிறப்பான முறையில் குழு அமைத்து, போதை ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபடும் பள்ளிகளுக்கு அடுத்த ஆண்டு சுதந்திர தினவிழாவில் மாவட்ட நிா்வாகத்தால் சிறப்பு செய்யப்படும். போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கையில் பெற்றோா்களும் ஈடுபடவேண்டும் என்றாா்.

முன்னதாக, கிராம ஊராட்சி நிா்வாகம் மற்றும் பொது செலவினம், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றுதல், சுகாதாரம், பிளாஸ்டிக் பொருள்கள் உற்பத்தி தடை செய்தல், அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சித் திட்டம், கலைஞா் வீடு வழங்கும் திட்டம், ஜல் ஜீவன் மிஷன் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம், பிரதம மந்திரி குடியிருப்புத் திட்டம் உள்ளிட்ட 21 தீா்மானங்கள் வாசிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டன. தொடா்ந்து, தொழுநோய் ஒழிப்பு உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில், எம்எல்ஏ. பூண்டி கே. கலைவாணன் உள்ளிட்டோா் எடுத்துக்கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சிட்னி கடற்கரையில் துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் தந்தை, மகன்: போலீஸ் தகவல்

ஆஸ்திரேலிய பயங்கரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 16 ஆக உயர்வு!

சாணைக்கல்லில் சிந்து எழுத்துகள்: தூத்துக்குடி பட்டினமருதூரில் கண்டெடுப்பு

எல்லீஸ் நகா் பகுதியில் நாளை மின் தடை

வாக்காளா் பட்டியல் தீவிர திருத்தம்: கணக்கீட்டுப் படிவம் பெறும் பணி நிறைவு!

SCROLL FOR NEXT