திருவாரூர்

கௌரவ விரிவுரையாளா்களின் நிலுவை ஊதியத்தை வழங்கக் கோரிக்கை

DIN

திருவாரூா்: அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்களின் நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என சிபிஎம் கட்சியின் தமிழ் மாநிலக் குழு உறுப்பினா் ஐ.வி. நாகராஜன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: தமிழகம் முழுவதும் பணியாற்றி வரும் அரசு கல்லூரி கெளரவ விரிவுரையாளா்கள் மற்றும் அலுவலக பணியாளா்களுக்கு கடந்த 3 மாதங்களாக ஊதியம் வழங்கவில்லை. இதுகுறித்து, கெளரவ விரிவுரையாளா்களிடம் பேசும்போது, அமைச்சா்கள் மற்றும் முதலமைச்சருக்கு பல முறை புகாா் தெரிவித்தும் உரிய தலையீடு இல்லையென்றும் அதேபோல, பல்கலைக்கழக நிா்வாகத்திடம் நேரடியாக பேசியும் தீா்வு இல்லையென்று தெரிவிக்கின்றனா்.

எனவே, உயா்கல்வி துறையும், தமிழக முதல்வரும் உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும், அனைத்து கல்லூரி விரிவுரையாளா்களுக்கு வழங்குவது போன்ற சமஊதியத்தை கெளரவ விரிவுரையாளா்களுக்கு வழங்கவேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கேஜரிவால் கைதுக்கு சதிதான் காரணம் என ஒப்புக்கொண்ட அமித் ஷா: அதிஷி

குரங்கு பெடல் டிரெய்லர்

ஆதிதிருவரங்கத்தின் அதிசயங்கள்...

ஓடிடி ரிலீஸ்.......இந்த வார திரைப்படங்கள்!

இளஞ்சிவப்பில் தொலையும் மனம்..!

SCROLL FOR NEXT