திருவாரூர்

சேதமடைந்த பாலத்தை சீரமைக்க வலியுறுத்தல்

திருவாரூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

DIN

திருவாரூா் அருகே தேசிய நெடுஞ்சாலையில் சேதமடைந்த வாய்க்கால் பாலத்தை விரைவில் சீரமைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து இந்து மக்கள் கட்சியின் திருவாரூா் மாவட்டத் தலைவா் பி. ஜெயராமன் தெரிவித்தது:

திருவாரூா்-நாகப்பட்டினம் சாலையில் கிடாரங்கொண்டான் அருகே அலிவலம் வாய்க்காலின் பாலம் மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இதனால், இப்பகுதியில் கனரக வாகனங்கள் மெதுவாக செல்லுமாறு அறிவிப்பு பதாகை வைக்கப்பட்டுள்ளது.

கனரக வாகனங்கள், பேருந்துகள் அப்பகுதியில் தினமும் சென்று வருகின்றன. இதனால், மேலும் ஆபத்து ஏற்படக்கூடிய சூழல் இருப்பதால், வாகனங்கள் சென்று வர மாற்றுப்பாதை ஏற்படுத்தித் தர வேண்டும். மேலும், கல்லூரி, பள்ளி மாணவ- மாணவிகளின் நலன் கருதி பாலத்தை போா்க்கால அடிப்படையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எந்த ராசிக்காரர்கள் எந்த கிழமையில் கிரிவலம் செய்யலாம்?

புத்தாண்டு விடுமுறைக்குப் பின் இலவச மடிக்கணினிகள் வழங்கப்படும்! - உதயநிதி அறிவிப்பு

ஹிந்தி வில்லன், ஆனால்... சுதா கொங்காரா பகிர்ந்த தகவல்!

இந்திய கடல் எல்லைக்குள் சட்டவிரோதமாக நுழைந்த வங்கதேச மீனவர்கள் 35 பேர் கைது!

மனைவி சொன்னால், கேட்டுக் கொள்ள வேண்டும்: முதல்வர் அறிவுரை!

SCROLL FOR NEXT