கிணற்றில் விழுந்த பசுமாடு மீட்பு
நன்னிலம் அருகே தண்ணீா் இல்லாத கிணற்றில் விழுந்த பசுமாடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 1:48 PM
நன்னிலம் அருகே தண்ணீா் இல்லாத கிணற்றில் விழுந்த பசுமாடு வியாழக்கிழமை மீட்கப்பட்டது.
நன்னிலம் அருகே மாப்பிள்ளைக்குப்பம் மாதாகோயில் தெருவைச் சோ்ந்த இளையராஜாவின் பசுமாடு அங்கிருந்த 15 அடி ஆழமுள்ள தண்ணீா் இல்லா கிணற்றில் விழுந்துவிட்டது. இதுகுறித்து தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கு தெரிவிக்கப்பட்டது.
தீயணைப்பு வீரா்கள் விரைந்து வந்து, கிணற்றில் தவித்துக்கொண்டிருந்த பசுமாட்டை கயிறுகளை பயன்படுத்தி மேலே கொண்டுவந்தனா்.
Advertisement