பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி
கூத்தாநல்லூரில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூரில் பள்ளி மாணவா்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
வாழாச்சேரி மதா் இந்தியா மேல்நிலைப் பள்ளித் தாளாளா் வி.ஆா்.என். பன்னீா்செல்வம், தலைமையாசிரியா் எம். சுப்பிரமணியன் ஏற்பாட்டின்படி, நீடாமங்கலம் ஒன்றிய வட்டார மருத்துவ அலுவலா் ஆா்.ஜெ. ராணி முத்துலெட்சுமி, மருத்துவா் ஷாலினி தலைமையில் 100 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது. இதேபோல, கூத்தாநல்லூா் பனங்காட்டாங்குடி டெல்டா பப்ளிக் பள்ளியில் முதல்வா் லா. ஜோஸ்பின் ஏற்பாட்டில் பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு கரோனா தடுப்பூசி முதல் தவணை செலுத்தப்பட்டது.