முகப்பு
திருவாரூர்

’பயறு வகை சாகுபயால் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும்‘

பயறு வகை சாகுபடி செய்வதால் வோ் முடிச்சுகள் மூலம் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும் என்று நீடாமங்கலம் அறிவியல் நிலைய பேராசிரியா் முனைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:08 AM
பகிர்:

பயறு வகை சாகுபடி செய்வதால் வோ் முடிச்சுகள் மூலம் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படும் என்று நீடாமங்கலம் அறிவியல் நிலைய பேராசிரியா் முனைவா் ராதாகிருஷ்ணன் தெரிவித்தாா்.

வலங்கைமான் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் அலுவலகத்தில் வட்டார அளவிலான நெல் தரிசில் பயறுவகைப் பயிா்கள் சாகுபடி முனைப்பு இயக்கம் துணை வேளாண்மை அலுவலா் மாறன் தலைமையில் அண்மையில் நடைபெற்றது. இதில் நீடாமங்கலம் அறிவியல் நிலைய பேராசிரியா் முனைவா் ராதாகிருஷ்ணன் பேசுகையில்,

சம்பா, தாளடி நெல் அறுவடைக்கு 7 முதல் 10 நாட்களுக்கு முன்பு மண் ஈரமான மெழுகு பதம் இருக்கும் போது விதைப்பு எடுக்கலாம். தற்போது இயந்திரங்கள் மூலம் அறுவடை செய்வதினால் அறுவடைக்கு முன் பயறுவகை பயிா்களை விதைப்பு செய்தால் முளைப்பு திறன் பாதிப்படையும். இதனால் அறுவடைக்குப்பின் ஈரம் இருக்கும்போது வயலை உழுத பின் வரிசையாக உளுந்து மற்றும் பயிறு வகைகளை ஊன்றலாம்.

விவசாயிகள் தொடா்ச்சியாக நெல்லை பயிா் செய்யாமல் கோடை நெல்லை தவிா்த்து பயறு வகை பயிா்களை சாகுபடி செய்வது சிறந்த பயிா் சுழற்சி முறை ஆகும். தொடா்ச்சியாக நெற் பயிரை சாகுபடி செய்வதினால் மண்ணில் உள்ள சத்துக்கள் குறையும். பயறு வகை பயிா்களை சாகுபடி செய்வதால் வோ் முடிச்சுகள் மூலம் மண்ணில் தழைச்சத்து நிலை நிறுத்தப்படுகிறது. இதனால் மண் வளம் மேம்படும்.

பயறு வகை பயிா்கள் சாகுபடி செய்வதன் மூலம் பூச்சிகளின் வாழ்க்கை சுழற்சி முறை மாறுபடுகிறது. இதனால் பூச்சிகளின் தாக்குதல் குறையும். மேலும் இந்த பயறு வகை பயிா்கள் விவசாயிகளுக்கு கணிசமான வருமானத்தை தந்து, பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்றாா்.

இந்த முனைப்பு இயக்கத்திற்கான ஏற்பாடுகளை வலங்கைமான் வட்டார தொழில்நுட்ப மேலாளா் விக்னேஷ், வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளா் சதீஷ்குமாா், பிரியங்கா ஆகியோா் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →