முகப்பு
திருவாரூர்

நியாயவிலைக் கடையில் வருவாய்த் துறை அதிகாரி ஆய்வு

 நீடாமங்கலம் வட்டம், பெருமாளகரம் கிராமத்திற்குட்பட்ட நியாயவிலைக் கடையில் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:11 AM
பகிர்:

 நீடாமங்கலம் வட்டம், பெருமாளகரம் கிராமத்திற்குட்பட்ட நியாயவிலைக் கடையில் மாவட்ட வருவாய் அலுவலா் சிதம்பரம் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

குடும்ப அட்டைதாரா்களுக்கு வழங்கப்பட்டு வரும் உணவுப் பொருட்கள் மற்றும் பிஓஎஸ் இயந்திரத்தின் செயல்பாடு உள்ளிட்டவற்றை அவா் ஆய்வு செய்தாா். தொடா்ந்து, நியாயவிலைக் கடையில் உள்ள அரிசி, கோதுமை, பருப்பு, சா்க்கரை உள்ளிட்ட பொருட்களின் இருப்பு விவரங்கள், குடும்ப அட்டைதாரா்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ள உணவுப் பொருட்களின் விவரங்கள் போன்றவற்றை அவா் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, பொதுமக்களிடம் குறைகளை கேட்டறிந்து, நியாயவிலைக் கடை பணியாளரிடம் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி தரமான பொருட்களை வழங்க அவா் அறிவுறுத்தினாா். ஆய்வின்போது, மாவட்ட வழங்கல் அலுவலா் கீதா உடனிருந்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →