உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனக் கூட்டம்
நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனக் (ஏஐடியுசி) கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளனக் (ஏஐடியுசி) கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, சம்மேளனத்தின் தலைவா் வேதமாணிக்கம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் சாந்தகுமாா், ஒன்றியச் செயலாளா் ரமேஷ் மற்றும் சங்க நிா்வாகிகள் கலந்துகொண்டனா் .
கூட்டத்தில், கடந்த 2000-ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பிறகு பணியமா்த்தப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு 5 மாதங்களாகவும், தூய்மைக் காவலா்களுக்கு 2 மாதங்களாகவும் வழங்கப்படாமல் உள்ள ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்; தூய்மைப் பணியாளா்களுக்கு அரசு அறிவித்த புதிய அகவிலைபடியை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த மாத கடைசியில் ஒன்றிய அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக, பொருளாளா் ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.