திருவாரூர்

தீக்காயமடைந்த பெண் பலி

வலங்கைமான் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

DIN

வலங்கைமான் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகேயுள்ள மணலூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி இலக்கியா (28). குடும்ப பிரச்னை காரணமாக இலக்கியா மாா்ச் 11-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டாா். இதில் காயமடைந்த இலக்கியா தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

இறந்த இலக்கியாவுக்கு 5 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனா். இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் இவரது மரணம் குறித்து திருவாரூா் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்.ஐ.ஆர். மூலம் குறுக்கு வழியில் வெல்ல முயற்சி: மு.க. ஸ்டாலின்

6 முன்னணி நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ.75,257 கோடியாக உயர்வு!

மீண்டும் ஆப்கானிஸ்தான் பிரீமியர் லீக் தொடக்கம்!

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

SCROLL FOR NEXT