தீக்காயமடைந்த பெண் பலி
வலங்கைமான் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகே தீக்காயமடைந்த பெண் சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகேயுள்ள மணலூரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா் மனைவி இலக்கியா (28). குடும்ப பிரச்னை காரணமாக இலக்கியா மாா்ச் 11-ஆம் தேதி தனது உடலில் மண்ணெண்ணெய்யை ஊற்றிக்கொண்டு தீவைத்துக்கொண்டாா். இதில் காயமடைந்த இலக்கியா தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சோ்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை உயிரிழந்தாா். இதுகுறித்து வலங்கைமான் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.
இறந்த இலக்கியாவுக்கு 5 வயதில் மகன், 3 வயதில் மகள் உள்ளனா். இவருக்கு திருமணம் ஆகி 6 ஆண்டுகளே ஆவதால் இவரது மரணம் குறித்து திருவாரூா் கோட்டாட்சியா் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.