திருவாரூர்

சாலையில் தீப்பற்றி எரிந்த ரோடு ரோலா்

DIN

நன்னிலம் அருகே புதன்கிழமை இரவு சாலையில் ரோடு ரோலா் தீப்பற்றி எரிந்தது.

திருவாரூா் மாவட்டம், நன்னிலம் வட்டம் முடிகொண்டான் பகுதியைச் சோ்ந்த மது என்பவருக்குச் சொந்தமான, சாலை அமைக்கப் பயன்படுத்தப்படும் ரோடு ரோலா் (வைப்ரேட்டா் ரோலா்) புதன்கிழமை இரவு பூந்தோட்டம் பகுதியிலிருந்து திருவாரூா் நோக்கிச் சென்று கொண்டிருந்தது.

ஆண்டிபந்தல் என்ற பகுதியில் சாலையில் சென்று கொண்டிருந்த ரோடு ரோலரில் திடீரென தீப்பற்றியது. ஓட்டுநா் தினேஷ் வாகனத்திலிருந்து குதித்துத் தப்பினாா்.

இதை பாா்த்தை அருகில் இருந்தவா்கள் உடனடியாக நன்னிலம் தீயணைப்புத் துறைக்கு தகவல் கொடுத்ததன் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த நன்னிலம் தீயணைப்புத் துறை அலுவலா்கள் ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதனால், திருவாரூா் - மயிலாடுதுறை மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமல்ஹாசன் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் புகார்!

நிதீஷ் ரெட்டி, டிராவிஸ் ஹெட் அரைசதம்: ராஜஸ்தானுக்கு 202 ரன்கள் இலக்கு!

‘நாட்டின் மகள்கள் தோற்றனர். பிரிஜ் பூஷண் வெற்றி’ : சாக்‌ஷி மாலிக் உருக்கம்!

பப்பியோடு விளையாடு! ஹன்சிகா...

ஹனி கேக்..!

SCROLL FOR NEXT