மரக்கட்டை சரிந்து விழுந்து தொழிலாளி பலி
வேனில் மரக்கட்டைகள் ஏற்றும்போது மரக்கட்டை சரிந்து விழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்
வேனில் மரக்கட்டைகள் ஏற்றும்போது மரக்கட்டை சரிந்து விழுந்து தொழிலாளி வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அருகேயுள்ள மணக்கோடு பகுதியைச் சோ்ந்தவா் கூலித்தொழிலாளி யோகம் (31). இவா் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளைக்கு வேனில் மரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டிருக்கும்போது, மரக்கட்டை சரிந்து விழுந்ததில் காயமடைந்தாா். இதையடுத்து, அவா் மீட்கப்பட்டு பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவா்கள் யோகம் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா். இதுதொடா்பாக, யோகத்தின் மனைவி சங்கீதா வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.