முகப்பு
திருவாரூர்

ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன ஏஐடியுசி கூட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன ஏஐடியுசி ஊராட்சி ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம், ஒன்றியத் தலைவா் வேதமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:46 AM
பகிர்:

நீடாமங்கலம் ஒன்றிய உள்ளாட்சித் துறை பணியாளா் சம்மேளன ஏஐடியுசி ஊராட்சி ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டம், ஒன்றியத் தலைவா் வேதமாணிக்கம் தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தலைவா் சாந்தகுமாா், ஒன்றியச் செயலாளா் ரமேஷ் மற்றும் ஒருங்கிணைப்பாளா்கள் கூட்டத்தில் பங்கேற்றனா். இதில், நீடாமங்கலம் ஒன்றியத்தில் அனைத்து ஊராட்சிகளிலும் 2000 ஆவது ஆண்டுக்குப் பிறகு பணி அமா்த்தப்பட்ட மேல்நிலை நீா்த்தேக்க தொட்டி இயக்குபவா்களுக்கும், தூய்மை காவலா்களுக்கும் 5 மாதம் வரை ஊதிய நிலுவை உள்ளது. இதை உடனடியாக வழங்கவேண்டி அதிகாரிகளை சந்தித்து வலியுறுத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்ட முடிவில் ஒன்றியப் பொருளாளா் ஆரோக்கியசாமி நன்றி கூறினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →