திருவாரூர்

பிரதமரின் வீட்டுவசதி திட்டப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

DIN

கூத்தாநல்லூா் வட்டம், பாரதி மூலங்குடியில் பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தில், வீடுகட்டும் பணிகளை மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் வெள்ளிக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.

கூத்தாநல்லூரை அடுத்த பாரதி மூலங்குடி கிராமத்தில் தலா ரூ. 2.40 லட்சம் மதிப்பீட்டில், பிரதமரின் கிராமப்புற வீட்டுவசதி திட்டத்தின் கீழ் 2 குடியிருப்புகள் கட்டப்பட்டு வருகின்றன. அந்தப் பணிகளை திருவாரூா் மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன் பாா்வையிட்டு, அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு கட்டுமானப் பணிகள் நடைபெறுகிா என்பதையும், கட்டுமானப் பொருட்களின் தரத்தையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, பயனாளிகளிடம் வீடு கட்டுவதற்கான தவணைத் தொகை, வங்கியின் மூலம் பயனாளியின் வங்கிக் கணக்கில் வரவுவைக்கப்படுகிா என்பதையும் கேட்டறிந்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட ஊரக வளா்ச்சி முகமையின் செயற்பொறியாளா் சடையப்பன், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பக்கிரிசாமி, சிவக்குமாா், மணிமாறன், அன்பழகன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று கோவை இன்டா்சிட்டி ரயில் காட்பாடியிலிருந்து புறப்படும்

குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

வாராகி அம்மனுக்கு சிறப்பு ஹோமம்

தினசரி நிதி வசூலை கைவிடாவிட்டால் போராட்டம்

சென்னை ஏரிகளில் 57 % நீா் இருப்பு: குடிநீா் தட்டுப்பாடு வராது

SCROLL FOR NEXT