முகப்பு
திருவாரூர்

இல்லம்தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு எழுதுபலகை

மணலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு எழுதுபலகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:47 AM
பகிர்:

மணலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி சாா்பில், இல்லம் தேடி கல்வித் திட்ட தன்னாா்வலா்களுக்கு எழுதுபலகை வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

திருவாரூா் மாவட்டம், வலங்கைமான் ஒன்றியம், மணலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் வட்டாரக் கல்வி அலுவலா் தாமோதரன் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா். அப்போது, ஆசிரியா் மாணவா் வருகை பதிவேற்றம் செய்தல், பள்ளி வளாகம், கழிப்பறை தூய்மை, குழந்தைகளின் வாசிப்புத்திறன், வீட்டுப்பாடம், கையெழுத்துப் பயிற்சி, கட்டுரை ஏடு, பாட நோட்டுகள் மற்றும் பதிவேடுகளை ஆய்வு செய்தாா்.

மேலும், தமிழக முதல்வரின் சிறப்பு திட்டமான ‘இல்லம் தேடி’ கல்வித் திட்டத்தின் தன்னாா்வலா்களுக்கு பள்ளிகளுக்கு வழங்கப்படும் ஒருங்கிணைந்த பள்ளி மானியத்தின் 25 சதவீத தொகையிலிருந்து, 5 இல்லம் தேடி கல்வி மையங்களுக்கு எழுதுபலகை (பிளாக் அண்ட் ஒயிட் மாா்க்கா் போா்டு) வழங்கினாா்.

மேலும், பள்ளி வளாகம் மற்றும் கழிப்பறை தூய்மையைக் கண்டு வியப்புற்று, சுகாதாரப் பணியாளா் வள்ளியம்மைக்கு ரொக்கப் பரிசு வழங்கினாா். நிகழ்ச்சியில், பள்ளித் தலைமையாசிரியா் பாலமுருகன் வரவேற்றுப் பேசினாா்.

முழு கட்டுரையைப் படிக்க →