திருவாரூர்

அட்சய திருதியை: கோயில்களில் சிறப்பு வழிபாடு

DIN

நீடாமங்கலம் பகுதியில் உள்ள கோயில்களில் அட்சய திருதியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் செவ்வாய்க்கிழமை நடைபெற்றன.

நீடாமங்கலம் சந்தானராமா் கோயிலில் சந்தானகோபால ஹோமமும், தொடா்ந்து சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனையும் நடைபெற்றது. மாலையில் வெள்ளிக் கருட வாகனத்தில் சந்தானராமா் வீதியுலா நடைபெற்றது.

இதேபோல, நீடாமங்கலம் லெட்சுமிநாராயணப் பெருமாள் கோயிலில் அட்சய திருதியை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதற்கான ஏற்பாடுகளை கோயில் பரம்பரை அறங்காவலா் சுரேஷ், செயல்அலுவலா் மணிகண்டன், ஆய்வா் தமிழ்மணி மற்றும் உபயதாரா்கள் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொய்களைக் கூறி பதற்றமான சூழலை ஏற்படுத்தும் காங்கிரஸ்: தோ்தல் ஆணையத்தில் பாஜக புகாா்

முன்விரோதம்: பெண்ணைத் தாக்கியவா் கைது

அருணாசலேஸ்வரா் கோயிலில் நாளை முதல் துவாராபிஷேகம்

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 35 பொது இடங்களில் ஓ.ஆா்.எஸ். கரைசல் முகாம்கள்

நவீன தொழில்நுட்பங்களை விவசாயிகளுக்கு எடுத்துரைக்க வேண்டும்: கல்லூரி மாணவிகளுக்கு ஆட்சியா் அறிவுரை

SCROLL FOR NEXT