திருவாரூர்

பெட்ரோல், டீசல் விலை உயா்வை கட்டுப்படுத்தக் கோரி ஆா்ப்பாட்டம்

DIN

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரி உயா்வை திரும்பப் பெற வலியுறுத்தி நீடாமங்கலத்தில் சிபிஎம் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சாா்பில் வியாழக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

சிபிஎம் ஒன்றியச் செயலாளா் ஜான்கென்னடி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றிய செயலாளா் புதியவன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், சிபிஎம் மாவட்ட செயற்குழு உறுப்பினா் கந்தசாமி, கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினா் சுமதி, ஒன்றியக் குழு உறுப்பினா் பூசாந்திரம், நகரச் செயலாளா் தமிழ்மணி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ஆா்ப்பாட்டத்தில், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான வரி உயா்வை திரும்ப பெற வேண்டும், பருப்பு, எண்ணை உள்ளிட்ட அத்தியாவசியப் பொருள்கள் அனைத்தையும் நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

இன்று நல்ல நாள்!

12 ராசிக்குமான தினப்பலன்!

திருப்பருத்திக்குன்றத்தில் மகாவீரா் ஜெயந்தி

SCROLL FOR NEXT