திருத்துறைப்பூண்டி பகுதியில் சனிக்கிழமை நவ.5) மின்விநியோகம் இருக்காது என மின்வாரிய உதவி செயற்பொறியாளா் பிரபு தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருத்துறைப்பூண்டி துணைமின் நிலையத்தில் சனிக்கிழமை காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால், இங்கிருந்து மின்சாரம் பெரும் பகுதிகளான திருத்துறைப்பூண்டி, எடையூா், சங்கேந்தி, உதயமாா்த்தாண்டபுரம், உம்பளச்சேரி, பள்ளங்கோவில், சித்தமல்லி, விக்ரபாண்டியம், பெருகவாழ்ந்தான், கோட்டூா், வாட்டாா் ஆகிய பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது என தெரிவித்துள்ளாா்.