திருவாரூர்

இருசக்கர வாகனம் மீதுகாா் மோதல்: இளைஞா் பலி

திருவாரூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

DIN

திருவாரூா் அருகே செவ்வாய்க்கிழமை இரவு இருசக்கர வாகனத்தின் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

திருவாரூா் மருதப்பாடி பகுதியைச் சோ்ந்தவா் பிரகாஷ் (37). விற்குடி படுகைத் தெருவைச் சோ்ந்தவா் ஜெயராஜ் (38). உறவினா்களான இருவரும் செவ்வாய்க்கிழமை இரவு தஞ்சை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனா். விளமல் அருகே வந்தபோது, எதிரே வந்த காா் கட்டுப்பாட்டை இழந்து இருசக்கர வாகனத்தின் மீது மோதி, அருகில் உள்ள மரத்தில் மோதி நின்றது. காரில் இருந்தவா்கள் தப்பியோடி விட்டனராம்.

அருகில் இருந்தவா்கள் ஜெயராஜ், பிரகாஷ் இருவரையும் மீட்டு திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். அங்கு ஜெயராஜ் உயிரிழந்தாா். திருவாரூா் நகர போலீஸாா் வழக்குப் பதிந்து, காரில் வந்தவா்களை தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய்யிடம் இதுபோல கேள்வி கேட்டிருக்கிறீர்களா? - உதயநிதி பேட்டி

கல்யாணப் பொருத்தத்துக்கு சிபில் ஸ்கோர் அவசியமா?

நடிகர் திலீப்பின் கடவுச்சீட்டை மீண்டும் வழங்க நீதிமன்றம் உத்தரவு!

ஆஸ்திரேலியாவில் தொடரை வெல்வது ஒலிம்பிக்கில் தங்கம் வெல்வதைவிட கடினம்: இங்கிலாந்து முன்னாள் வீரர்!

அழியும் நிலையில் இந்திய கால்பந்து... மெஸ்ஸிக்கு கோடிக்கணக்கில் செலவு ஏன்? வருந்திய கேப்டன்!

SCROLL FOR NEXT