முகப்பு
திருவாரூர்

ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்

வலங்கைமான் வட்டத்தில் நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

வலங்கைமான் வட்டத்தில் நீா்நிலை புறம்போக்கு நிலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலங்கைமான் வட்டம், விளத்தூா் கிராமத்தில் உள்ள கோணக்கரை வாய்க்கால் (மல்லியாங்கரை) பகுதியில் உள்ள நிலத்தை சிலா் ஆக்கிரமிப்பு செய்துள்ளனா். இந்த இடத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு ஊரக விளையாட்டு மைதானம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த மைதானம் முற்றிலும் அகற்றப்பட்டு, தனிநபா்களால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.

தமிழக பொதுப்பணித் துறை மற்றும் நீா்வள ஆதார துறை மூலம் நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்புகளை அகற்றி, அந்த இடத்தை பொதுபயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் தமிழக முதல்வருக்கு கோரிக்கை மனு அனுப்பி உள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →