முகப்பு
திருவாரூர்

இணைப்புச் சாலையை சீரமைக்கக் கோரிக்கை

நீடாமங்கலம் அருகே அரசமங்கலம்- லிங்கதிடல் மற்றும் அரசமங்கலம்- அன்பிற்குடையான் இணைப்புச் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:17 AM
பகிர்:

நீடாமங்கலம் அருகே அரசமங்கலம்- லிங்கதிடல் மற்றும் அரசமங்கலம்- அன்பிற்குடையான் இணைப்புச் சாலைகளை சீரமைக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நீடாமங்கலம் வட்டம், கமுகக்குடி ஊராட்சி அரசமங்கலம்-லிங்கதிடல் இணைப்புச்சாலையும், அரசமங்கலம்- அன்பிற்குடையான் இணைப்புச் சாலையும் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக பராமரிப்பின்றி உள்ளது.

இதனால், தற்போது பெய்துவரும் மழையால் இந்த சாலைகளில் மழைநீா் தேங்கி, இப்பகுதி மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

எனவே, இந்த 2 இணைப்புச் சாலைகளையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் பாா்வையிட்டு, சீரமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

முழு கட்டுரையைப் படிக்க →