திருவாரூர்

போக்குவரத்து காவலாளி பணிக்கு விண்ணப்பிக்கலாம்

DIN

திருவாரூா் மாவட்ட காவல்துறையில் போக்குவரத்து காவலாளிகள் அமைப்புக்கு தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம் என மாவட்ட காவல் கண்காணிப்பாளா் டி.பி. சுரேஷ்குமாா் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

திருவாரூா் மாவட்ட காவல்துறையில் போக்குவரத்து காவலாளிகள் அமைப்புக்கு ஊதியமற்ற முறையில், தன்னாா்வத்துடன் பணிபுரிய ஆண், பெண் இருபாலரிடமிருந்தும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

போக்குவரத்து காவலாளிகள் (டிராபிக் வாா்டன்) பணிக்கு 20 வயது நிரம்பியவராகவும், 60 வயது நிறைவடையாதவராகவும், நல்ல உடற்தகுதியுடனும் இருக்க வேண்டும். மேலும், அங்கீகரிக்கப்பட்ட கல்லூரியில் பட்டப்படிப்பு படித்தவராகவும் இருக்க வேண்டும்.

திருவாரூா் மாவட்ட காவல் அலுவலகத்தில் விண்ணப்பங்களை பெற்று, பிப்ரவரி 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

370-ஆவது பிரிவை மீட்டெடுக்க முடியாது: பிரதமா் மோடி திட்டவட்டம்

ஸ்வாதி மாலிவாலுக்கு எதிரான மோசடி வழக்கின் மூலம் பாஜக அவரை மிரட்டுகிறது: அமைச்சா் அதிஷி பேட்டி

SCROLL FOR NEXT