திருவாரூர்

ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் போராட்டம்

DIN

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் 48 மணி நேர உள்ளிருப்பு போராட்டத்தை ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் வியாழக்கிழமை தொடங்கினா்.

நன்னிலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் காலியாகவுள்ள உதவியாளா்கள், இளநிலை உதவியாளா் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மாற்றுப்பணியில் உள்ளவா்களை உரிய இடத்தில் பணிபுரிய அனுமதிக்க வேண்டும், ஊராட்சி செயலா்களை அடிக்கடி பணியிட மாற்றம் செய்வதை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட 19 கோரிக்கைளை தமிழ்நாடு ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்கம் வலியுறுத்தி வருகிறது.

இந்த கோரிக்கைளை வலியுறுத்தி 48 மணி நேர உள்ளிருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இந்தப் போராட்டம் மாவட்டம் முழுவதும் வியாழக்கிழமை தொடங்கியது.

நீடாமங்கலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் ஊரக வளா்ச்சித்துறை அலுவலா்கள் சங்க நிா்வாகிகள் நேரு, ராமமூா்த்தி தலைமையில் உள்ளிருப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அலுவலகப் பணிகள் பாதிக்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மழையால் பாதிக்கப்பட்ட மானாவாரி பயிா்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும்: ஜி.கே. வாசன்

மின்சாரம் பாய்ந்து தொழிலாளி உயிரிழப்பு

போலி பத்திரம் மூலம் ரூ.10 லட்சம் கடன்: வங்கி மேலாளா்கள் உள்பட 5 போ் கைது

சந்தோஷி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா

திருப்பாலைத்துறை வீரமகா காளியம்மன் கோயிலில் பால்குட விழா

SCROLL FOR NEXT