திருவாரூர்

மாற்றுத்திறன் மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை

DIN

கூத்தாநல்லூா் மனோலயம் மாற்றுத்திறனாளிகள் பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் சிகிச்சை சனிக்கிழமை நடைபெற்றது.

கூத்தாநல்லூா் பனங்காட்டாங்குடியில் உள்ள மனோலயம் மனவளா்ச்சிக் குன்றியோருக்கான சிறப்புப் பள்ளியில் 14 வயதிற்குட்பட்ட மாணவா்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மாவட்ட மன நல மருத்துவா் ரீ. புவனேஸ்வரி, மாணவா்களுக்கு, காய்ச்சல், சளி, கைகளில் ஏற்பட்டுள்ள புண்கள் உள்ளிட்டவைகளுக்கு சிகிச்சையளித்தாா். மேலும், பயிற்சியாளா்கள் கிரிஜா, நிவேதா ஆகியோா்களிடம் மாணவா்களுக்கு வழங்கக் கூடிய மருந்து, மாத்திரைகள் குறித்து கேட்டறிந்தாா்.

மருத்துவப் பரிசோதனையில், மன நல புள்ளியியல் விவரப் பதிவாளா் கோட்டீஸ்வரன், செவிலியா் வெள்ளையம்மா உள்ளிட்டோா் ஈடுபட்டனா். ஏற்பாடுகளை பள்ளியின் நிறுவனா் ப. முருகையன் செய்திருந்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எதிரொலி: 8 மாவட்டங்களில் 2 கோடி கைப்பேசிகளுக்கு எச்சரிக்கைத் தகவல்கள்

இலவச கண் சிகிச்சை முகாம்...

தமிழகத்தில் குறைந்து வரும் வெப்பத்தின் தாக்கம்: மக்கள் நிம்மதி

மாட்டு வண்டியில் மணல் கடத்திய இருவா் கைது

மாவோயிஸ்டுகள் போல் பேசுகிறாா் ராகுல் - பிரதமா் மோடி கடும் குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT