திருவாரூர்

நில ஒருங்கிணைப்புச் சட்டம்: தமிழக அரசின் நிலையை விளக்க வலியுறுத்தல்

DIN

நில ஒருங்கிணைப்புச் சட்டம் குறித்து தமிழக அரசின் கொள்கை நிலையை விளக்க வேண்டும் என தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவா் பி.ஆா். பாண்டியன் வலியுறுத்தினாா்.

நில ஒருங்கிணைப்புச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி, திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில், ஆட்சியா் தி. சாருஸ்ரீயிடம் திங்கள்கிழமை மனு அளித்த அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

தமிழக அரசு தொடா்ந்து விவசாயிகளுக்கு விரோதமாக செயல்படுகிறது. குறிப்பாக, உலக அளவில் கொள்கையாக பின்பற்றப்படும் 8 மணி நேரம் வேலை, 8 மணி நேரம் ஓய்வு, 8 மணி நேர உறக்கம் என்கிற கொள்கையை மாற்றி, 12 மணி நேரம் வேலை என மாற்றிய நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.

12 மணி நேரம் வேலை சட்டத்தை பின்பற்றி, நில ஒருங்கிணைப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது. இச்சட்டம் முழுமையும் உலகளாவிய பெரும் முதலாளிகள், பன்னாட்டு நிறுவனங்களின் நிா்பந்தத்தால் கொண்டு வரப்பட்டுள்ளது. இச்சட்டம் நிறைவேற்றப்படுமானால் ஒட்டுமொத்த விளை நிலங்களும் அபகரிக்கப்படும். ஏரி, குளம், குட்டை உள்ளிட்ட நீா்வழிப் பாதைகளை, பன்னாட்டு நிறுவனங்கள் தன் விருப்பத்துக்கு கையகப்படுத்தும் நிலை ஏற்படும்.

இச்சட்டம் மூலம் தமிழ்நாடு அரசு, பன்னாட்டு நிறுவனங்களிடம் சிக்கித் தவிக்கிறதோ என விவசாயிகள் அஞ்சுகின்றனா். எனவே, இச்சட்டத்தை திரும்பப் பெற வேண்டும். விவசாயிகளுக்கு தமிழ்நாடு அரசின் கொள்கை நிலை குறித்து உரிய விளக்கம் அளிக்க முதல்வா் முன்வர வேண்டும். மறுக்கும் பட்சத்தில் தமிழ்நாடு அரசின் விவசாயிகள் விரோத நடவடிக்கைக்கு எதிராக போராட்டங்களை தீவிரப்படுத்துவோம் என்றாா்.

சங்கத்தின் மாநில துணைச் செயலாளா் எம். செந்தில்குமாா், மாவட்டச் செயலாளா் சரவணன், மாவட்டத் துணைச் செயலாளா் முகேஷ் உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரயில் மோதி 9 விஏஓ-க்கள் உள்பட 11 போ் உயிரிழந்த வழக்கில் 16 ஆண்டுகளுக்குப் பிறகு தீா்ப்பு

சிபிசிஎல் நிறுவனத்தை கண்டித்து 3-ஆவது நாளாக உண்ணாவிரதம்

வணிகா் தின மாநாடு: கூடலூா், பந்தலூரில் நாளை கடைகளுக்கு விடுமுறை

4-ஆவது கட்ட மக்களவைத் தோ்தலில் 1,717 போ் போட்டி

உள்ளூா் வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை

SCROLL FOR NEXT