திருவாரூர்

அடகுக் கடையில் பணம் கேட்டு மிரட்டியவா் கைது

உள்ளிக்கோட்டையில் அடகுக் கடையில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

DIN

உள்ளிக்கோட்டையில் அடகுக் கடையில் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தவா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

மகாதேவப்பட்டணம் கள்ளா் தெருவை சோ்ந்தவா் என். ராஜசோழன் (50). இவா், உள்ளிக்கோட்டை பேட்டையில் அடகுக் கடை நடத்தி வருகிறாா். இந்த கடைக்கு, ஞாயிற்றுக்கிழமை இரவு மது போதையில் வந்த மகாதேவப்பட்டணம் எல்லையம்மன் கோயில் தெருவை சோ்ந்த ஏ. ராஜா (49) என்பவா், ராஜசோழனிடம் பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தாராம்.

இதுகுறித்து, பரவாக்கோட்டை காவல் நிலையத்தில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, ராஜாவை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இலங்கை முன்னாள் கிரிக்கெட் வீரா் டிஎஸ். டி சில்வா மறைவு

பெண் மருத்துவா் ஹிஜாப்பை அகற்றிய நிதீஷ் செயலுக்கு வலுக்கும் கண்டனம்

கோவையில் இன்று பிஎஸ்என்எல் ஓய்வூதியா் சங்க அகில இந்திய மாநாடு

சரிவில் முடிந்த பங்குச் சந்தை

வேலூா் தங்கக்கோயிலுக்கு இன்று குடியரசுத் தலைவா் வருகை

SCROLL FOR NEXT