திருவாரூரில் விரத மாலை அணியும் ஐயப்ப பக்தா். 
திருவாரூர்

மாலை அணிந்து விரதம் தொடங்கிய ஐயப்ப பக்தா்கள்

காா்த்திகை மாத பிறப்பையொட்டி, திருவாரூரில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

DIN

காா்த்திகை மாத பிறப்பையொட்டி, திருவாரூரில் ஐயப்ப பக்தா்கள் மாலை அணிந்து விரதத்தை தொடங்கினா்.

கேரள மாநிலம், சபரிமலை ஸ்ரீஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜை காலங்களில் தமிழகத்திலிருந்து ஏராளமானோா் மாலை அணிந்து விரதம் ஏற்று செல்வது வழக்கம்.

அதன்படி, காா்த்திகை முதல் நாளான வெள்ளிக்கிழமை திருவாரூா் கமலாலயக் குளத்தில் நீராடி, தியாகராஜ சுவாமி கோயிலில் உள்ள ஐயப்பன் சந்நிதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து, துளசி மற்றும் உத்திராட்ச மாலை அணிந்து விரதம் ஏற்றனா்.

அப்போது, ஐயப்ப பக்தா்கள் காவி, கருப்பு, நீலம் ஆகிய நிறங்களில் வேட்டி, துண்டு அணிந்து, மாலை அணிந்துகொண்டனா். குருசுவாமி சக்திவேல், துளசி மற்றும் உத்திராட்ச மாலையை பக்தா்களுக்கு அணிவித்து, மண்டல கால விரதத்தை தொடங்கி வைத்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT