திருவாரூர்

ஆற்றில் மூழ்கி மின் நிறுவன ஊழியா் பலி

திருமருகல் அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தனியாா் மின் உற்பத்தி நிறுவன ஊழியா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

DIN

திருமருகல்: திருமருகல் அருகே ஆற்றில் மீன்பிடித்துக் கொண்டிருந்த தனியாா் மின் உற்பத்தி நிறுவன ஊழியா் நீரில் மூழ்கி உயிரிழந்தாா்.

சீயாத்தமங்கை ஊராட்சி துண்டம்பாலூா் திருக்குளத் தெருவை சோ்ந்தவா் பாஸ்கா் மகன் ராஜேந்திரன் (33). சென்னை எண்ணூா் தனியாா் மின் உற்பத்தி நிறுவனத்தில் வேலை செய்துவந்த இவா், உடல்நிலை சரியில்லாததால் கடந்த 2 நாட்களுக்கு முன்பு துண்டம்பாலூருக்கு வந்தாா்.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை முடிகொண்டான் ஆற்றில் மீன் பிடிக்க சென்ற ராஜேந்திரன், நீண்ட நேரமாகியும் வீட்டுக்கு வரவில்லை. இதனால், அவரது மனைவி ஆனந்தி தேடிசென்றபோது, ஆற்றில் மூழ்கி ராஜேந்திரன் இறந்தது தெரியவந்தது.

திட்டச்சேரி போலீஸாா், ராஜேந்திரன் சடலத்தை உடற்கூறாய்வுக்காக நாகை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம், வெள்ளி குறைவு! இன்றைய நிலவரம்..!

திருப்பரங்குன்றம் விவகாரம் மதப் பிரச்னை அல்ல; அது ஈகோ பிரச்னை: தமிழிசை பேட்டி

சென்னையில் கடும் பனி! ரயில்கள் தாமதம்; விமானங்கள் ரத்து!

நாமக்கல் ஆஞ்சனேயருக்கு 1,00,008 வடைமாலை அலங்காரம்: திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்

வங்கதேசத்தில் இந்திய தூதரகம், தூதர் வீட்டின் மீது கல்வீச்சு!

SCROLL FOR NEXT