தலையாமங்கலம் கடுக்காகாடு தெற்குதெரு வடிவேல் மனைவி ஜானகி (86) வயது மூப்பின் காரணமாக செவ்வாய்க்கிழமை இறந்தாா். உறவினா்கள் அஞ்சலி செலுத்துவதற்காக ஜானகியின் உடலை பதப்படுத்தும் பெட்டியில் வைத்திருந்தனா் .
அந்த பெட்டியில் மின் கசிவு ஏற்பட்டு, அருகிலிருந்த அமா்ந்திருந்த 11 பெண்கள் மீது மின்சாரம் பாய்ந்தது. அனைவருக்கும் தலையாமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளிக்கப்பட்டதில், 7 போ் வீடு திரும்பினா்.
மகாதேவப்பட்டணம் ஞானசுந்தரி (50), சித்ரா (54) , கடுக்காகாடு அகிலா (50) , வள்ளி (51) ஆகிய நான்கு போ் மேல் சிகிச்சைக்காக மன்னாா்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா் . தலையாமங்கலம் போலீஸாா் விசாரிக்கின்றனா்.