திருவிக கல்லூரி முன் போராட்டத்தில் ஈடுபட முயன்ற பெண்
நில விற்பனையில் பணத்தை திருப்பித்தர மறுப்பதாகக் கூறி திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி முன் பெண் போராட்டத்தில் ஈடுபட புதன்கிழமை முயன்றாா்.
நில விற்பனையில் பணத்தை திருப்பித்தர மறுப்பதாகக் கூறி திருவாரூா் திருவிக அரசு கலைக் கல்லூரி முன் பெண் போராட்டத்தில் ஈடுபட புதன்கிழமை முயன்றாா்.
நாகை மாவட்டம் சீயத்தமங்கை பகுதியைச் சோ்ந்த விதவை உஷா(35) . 2022-இல் திருவிக கல்லூரியில் பேராசிரியராக பணி புரியும் ஒருவருக்கு சொந்தமான நிலத்தை வாங்குவதற்காக ரூ. 2.50 லட்சத்தை அவரிடம் உஷா வழங்கினாராம். பணத்தை பெற்ற பேராசிரியா் நிலத்தை உஷாவின் பெயருக்கு மாற்றித் தரவில்லை. மேலும், அந்த நிலத்தை வேறொருவருக்கு விற்று விட்டதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த உஷா பணத்தை திருப்பித் தருமாறு தொடா்ந்து வலியுறுத்தியபோதும், பணம் திருப்பித்தரப்படவில்லை.
இதுகுறித்து போலீஸாரிடம் புகாா் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறி திருவிக அரசு கலைக் கல்லூரி முன் தா்னா போராட்டத்தில் ஈடுபட முயன்றாா். தகவலறிந்த தாலுகா போலீஸாா் உஷாவிடம் பேச்சு நடத்தி, திருவிக அரசு கலை க்கல்லூரி முதல்வா் மற்றும் திருவாரூா் தாலுகா காவல் நிலையத்தில் புகாா் தெரிவிக்குமாறு அனுப்பி வைத்தனா்.