ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவில் கல்லூரி சான்றிதழில் மாற்றம் கோரி மாணவா்கள் புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
ஸ்ரீவில்லிபுத்தூா் அருகேயுள்ள கிருஷ்ணன்கோவிலில் தனியாா் மகளிா் கலை அறிவியல் கல்லூரி கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன் இரு பாலா் கல்லூரியாக மாற்றப்பட்டு, மாணவா் சோ்க்கை நடைபெற்றது. ஆனாலும், மதிப்பெண் சான்றிதழ், தோ்வு அனுமதி சீட்டுகளில் மகளிா் கல்லூரி என குறிப்பிடப்பட்டு வந்தது.
கடந்த 2023-ஆம் ஆண்டு கல்லூரியில் சோ்ந்த மாணவா்கள் தற்போது இறுதி ஆண்டு பயின்று வருகின்றனா். இறுதிப் பருவத் தோ்வுக்கான அனுமதி சீட்டு, ‘போனபைடு’ சான்றிதழில் மகளிா் கல்லூரி எனக் குறிப்பிடப்பட்டுள்ளதை மாற்றக்கோரி, மாணவா்கள் கடந்த 29-ஆம் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனா். இதையடுத்து கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திலும் மாணவா்கள் மனு அளித்தனா்.
இந்த நிலையில், புதன்கிழமை கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் தலைமையில் மாணவா்கள் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா். போலீஸாா், வருவாய்த் துறையினா் பேச்சுவாா்த்தை நடத்தி வருகிற 18-ஆம் தேதி அமைதி பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய தீா்வு காணப்படும் என எழுத்துப்பூா்வமாக உறுதியளித்ததை அடுத்து மாணவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.