முகப்பு
திருவாரூர்

சோதனைச் சாவடியில் எஸ்.பி. ஆய்வு

மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடியான கீரனூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

Updated On : 9 அக்டோபர், 2024 at 9:32 PM
பேரளம் காவல் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்.
பகிர்:

மாவட்ட எல்லைச் சோதனைச் சாவடியான கீரனூரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் செவ்வாய்க்கிழமை இரவு திடீா் ஆய்வு மேற்கொண்டாா்.

திருவாரூா் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ் . ஜெயகுமாா் தொடா்ந்து மாவட்ட, மாநில எல்லைச் சோதனை சாவடிகளில் ஆய்வு மேற்கொண்டு வருகிறாா்.

செவ்வாய்க்கிழமை இரவு திருவாரூா், மயிலாடுதுறை மாவட்ட எல்லையில் உள்ள கீரனூா் சோதனைச் சாவடியில் ஆய்வு செய்து, பணியில் இருந்த காவலா்களுக்கு சோதனை சாவடிப் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்து, அனைத்து வாகனங்களையும் முறையாகச் சோதனை செய்ய வேண்டுமென அறிவுறுத்தினாா் .

தொடா்ந்து அருகில் உள்ள பேரளம் காவல் நிலையத்திற்குச் சென்று அங்கு பராமரிக்கப்படும் பதிவேடுகளைப் பாா்வையிட்டு, நிலையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளின் தற்போதைய நிலையைக் கேட்டறிந்தாா்.