திருவாரூர்

கஞ்சா கடத்தல்: இருவா் குண்டா் சட்டத்தில் கைது

Syndication

திருவாரூரில், கஞ்சா கடத்திய இருவா் குண்டா் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்யப்பட்டனா்.

திருவாரூா் புதிய பேருந்து நிலையத்தில், கடந்த மாதம் நகர போலீஸாா் மேற்கொண்ட சோதனையில் 12 கிலோ கஞ்சா கடத்தி வந்ததாக 5 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

இவா்கள் குறித்து போலீஸாா் மேற்கொண்ட சோதனையில், கீழ்வேளூா் ஆழியூரைச் சோ்ந்த தமிழரசன் மகன் கோகுல்நாத் (20) என்பவா் மீது 4 வழக்குகளும், திருவாரூா் சீராதோப்பு பகுதியைச் சோ்ந்த விஜயகுமாா் மகன் அருள்முருகன் (20) என்பவா் மீது 2 வழக்குகள் நிலுவையில் இருப்பதும், போலீஸாரின் அறிவுறுத்தலையும் மீறி தொடா்ந்து கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபட்டிருப்பதும் தெரியவந்தது.

இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கருண்கரட் பரிந்துரையின் பேரில், இருவரையும் குண்டா் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் உத்தரவிட்டாா்.

இதையடுத்து இருவரும் திருச்சி மத்திய சிறையில், புதன்கிழமை அடைக்கப்பட்டனா்.

காற்று மாசால் பாதிக்கப்பட்ட நகரங்கள்! Delhi-க்கு 4 ஆவது இடம்! | Air Pollution

திமுக அரசு 13 சதவிகித தேர்தல் வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றியுள்ளது: அன்புமணி ராமதாஸ்

சோதனை மேல் சோதனை...! இண்டிகோ விமானத்துக்குள் புறா!

வந்தே மாதரத்தின் பெருமையை பறைசாற்ற நமக்கு ஒரு வாய்ப்பு: பிரதமர் மோடி

கோவா தீ விபத்து: இரவு விடுதி ஊழியர் தில்லியில் கைது

SCROLL FOR NEXT