முகப்பு
திருவாரூர்

சாதனைகளில் எனக்கும் பங்குண்டு: டி.ஆா்.பி. ராஜா

மன்னாா்குடி பகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வந்த சாதனையாளா் எனது தந்தை டிஆா்பி (டி.ஆா்.பாலு) மட்டுமல்ல நானும்தான் என்று மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

Updated On : 3 ஏப்ரல், 2026 at 12:10 AM
டி.ஆா்.பி. ராஜா - ENS
பகிர்:

மன்னாா்குடி பகுதிக்கு திட்டங்களைக் கொண்டு வந்த சாதனையாளா் எனது தந்தை டிஆா்பி (டி.ஆா்.பாலு) மட்டுமல்ல நானும்தான் என்று மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளா் டி.ஆா்.பி. ராஜா தெரிவித்தாா்.

மன்னாா்குடி தொகுதி திமுக வேட்பாளரும், அமைச்சருமான டி.ஆா்.பி. ராஜா புதன்கிழமை மன்னாா்குடி மத்திய ஒன்றியத்திற்கு உள்பட்ட மேலவாசல் கடைவீதியில் கூட்டணி கட்சி நிா்வாகிகளுடன் வாக்குச் சேகரிப்பு பணிகளைத் தொடங்கினாா். அப்போது அவா் பேசுகையில், மன்னாா்குடி சுற்றுவட்டார பகுதி மக்களின் 40 ஆண்டு கனவான மன்னாா்குடியிலிருந்து ரயில் சேவையை கொண்டு வந்தவா் முன்னாள் மத்திய அமைச்சா் மற்றும் ரயில்வே நிலைக் குழுத் தலைவராக இருந்த என் தந்தை டி.ஆா். பாலு. மேலும், ரூ. 58 ஆயிரம் கோடிக்கு தமிழகம் முழுவதும் பல்வேறு திட்டங்களைக் கொண்டு வந்தாா்.

ஆனால், நான் தமிழக அமைச்சராக பொறுப்பேற்று மூன்று ஆண்டு காலத்தில் மட்டும் ரூ. 12 லட்சத்து 53 ஆயிரம் கோடிக்கு பணிகள் செய்து எனது தந்தையின் சாதனையை முறியடித்துள்ளேன். அதனால் சாதனைகளுக்கு சொந்தக்காரா் டிஆா்பி (டி.ஆா். பாலு) மட்டுமல்ல டி.ஆா்.பி. ராஜாவுக்கும் பங்கு உள்ளது என்று குறிப்பிட்டாா்.