புதுதில்லி

தில்லி பாஜக சார்பில் இன்று மகர சங்கராந்தி விழா

DIN

தில்லி பாஜகவின் பூர்வாஞ்சல் பிரிவு சார்பில் மகர சங்கராந்தியும், போஜ்புரி கலாசார விழாவும் ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 13) கொண்டாடப்படவுள்ளது.
இந்த ஆண்டு மகர சங்கராந்தி விழா மிகப் பிரம்மாண்டமான முறையில் போஜ்புரி கலாசார விழாவாகக் கொண்டாடப்படவுள்ளது. தில்லியில் உள்ள தால்கடோரா விளையாட்டரங்கில் நடைபெறவுள்ள இந்த விழாவில், பாஜகவின் ரவிசங்கர் பிரசாத், கேசவ் பிரசாத் மயூரா, கிரிராஜ் சிங், சுசில் குமார் மோடி உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் மற்றும் மற்றும் பிகார், உத்தர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த பிரமுகர்கள் கலந்து கொள்ளவுள்ளனர் என்று பாஜக வட்டாரங்கள் தெரிவித்தன.
இது குறித்து பாஜகவின் பூர்வாஞ்சல் மோர்ச்சாவின் தலைவர் மனீஷ் சிங் கூறுகையில், "இந்த விழாவில் 15,000 அதிகமான பூர்வாஞ்சல் மக்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. பூர்வாஞ்சல் பகுதியில் சங்கராந்தி எப்படிக் கொண்டாடப்படுமோ அதேபோன்று இங்கேயும் கொண்டாடப்படவுள்ளது. போஜ்புரி நடிகர்கள் கேசாரி லால் யாதவ், டிம்பிள் சிங், அஞ்சு ஜா, விகாஷ் ஜா உள்ளிட்டோர் கலந்து கொள்ளவுள்ளனர்' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒரே குடும்பத்தில் 5 பேருக்காக வீட்டு வாசலில் வாக்குச்சாவடி!

கஞ்சாவுடன் முதல்வரிடம் மனு - பாஜக நிர்வாகியிடம் விசாரணை

மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை!

குட் பேட் அக்லி படப்பிடிப்பு அப்டேட்!

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

SCROLL FOR NEXT