முகப்பு
புதுதில்லி

டெங்கு, மலேரியா பரவுவதை தடுக்க விழிப்புணர்வு பிரசாரம்

கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் விழிப்புணர்வுப் பிரசா

Updated On : 14 மே, 2018 at 11:52 PM
பகிர்:
Updated On : 30 ஜனவரி, 2024 at 6:33 PM

கொசுக்களால் பரவும் டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் தொடர்பாக கிழக்கு தில்லி மாநகராட்சிப் பகுதியில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
மலேரியா, டெங்கு உள்பட கொசுக்களால் பரவும் நோய்கள் தொடர்பாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் மாநகராட்சி தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக இம்மாதம் 15 -ஆம் தேதி முதல் 31- ஆம் தேதி வரை கிழக்கு தில்லி மாநகராட்சி பகுதிகளில் விழிப்புணர்வு பிரசாரம் நடைபெறவுள்ளது. அப்போது கொசுக்களால் பரவும் நோய்களில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய முன்ஏற்பாட்டு நடவடிக்கைகள் தொடர்பாக பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்படும் என்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.