புதுதில்லி

கொள்ளை வழக்கில் தொடர்புடையவர் கைது

DIN

கொள்ளை வழக்கில் தொடர்புடைய நபரைத் துப்பாக்கியுடன் போலீஸார் கைது செய்தனர். 
இதுதொடர்பாக தில்லி கிழக்கு மாவட்ட காவல் துணை ஆணையர் பங்கஜ் குமார் சிங் திங்கள்கிழமை தெரிவித்ததாவது:
பிரீத் விஹார் பகுதியில் கொள்ளை, வழிப்பறி சம்பவங்களைத் தடுக்கும் வகையில், அப்பகுதி போலீஸார் ஒரு தனிப்படை அமைத்திருந்தனர். அப்படையினர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை சாய் மந்திர் முன் பகுதியில் உள்ள பிபிஜி சாலை பகுதியில் வாகனக் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்தனர். காஜியாபாதைச் சேர்ந்த ஆசிஃப் (24) கைது செய்யப்பட்டார். அவருக்கு தில்லி, உத்தரப் பிரதேச மாநிலங்கள் நிகழ்ந்த 8 கொள்ளைச் சம்பவங்களில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கி, 2 தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டதாகக் காவல் அதிகாரி பங்கஜ் குமார் சிங் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எருக்கூரில் அமுது படையல் விழா

வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதம்

அரசு ராஜாஜி மருத்துவமனையில் வாா்டுகளின் எண்கள் மாற்றம் -நோயாளிகளின் நீண்ட கால குழப்பத்துக்கு தீா்வு

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

அரசுப் பள்ளி ஊழியா் மாரடைப்பால் மரணம்

SCROLL FOR NEXT