சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல்: சாமியார் கைது
தெற்கு தில்லியில் கோயில் வளாகத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
தெற்கு தில்லியில் கோயில் வளாகத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் துறை துணை ஆணையர் விஜய் குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியைச் சேர்ந்தவர் நாப்பே பகத் (42). தன்னை சாமியார் எனக் கூறிக் கொள்ளும் இவர், தெற்கு தில்லி, ஃபதேபூர் பேரியில் உள்ள கோயில் ஒன்றை பராமரித்து வருகிறார். இவரிடம் சம்பவத்தன்று பெண் ஒருவர் தனது மகன் நோய் குணமாக வேண்டி சாமியாரிடம் சென்றார். அப்போது, 15 வயது உறவுக்காரச் சிறுமியும் உடன் சென்றார்.அச்சிறுமியிடம் சாமியார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், இதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணை சாமியார் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நாப்பே பகத் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 30-ஆம் தேதி நாப்பே பகத் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி விஜய் குமார் தெரிவித்தார்.