புதுதில்லி

முதலாவது பெண் டிஜிபி காஞ்சன் செளத்ரி மறைவுக்கு கேஜரிவால் இரங்கல்

நாட்டின் முதலாவது பெண் டிஜிபியான காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யாவின் (72) மறைவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.

DIN

நாட்டின் முதலாவது பெண் டிஜிபியான காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யாவின் (72) மறைவுக்கு தில்லி முதல்வர் கேஜரிவால் இரங்கல் தெரிவித்துள்ளார்.
1973- ஆம் ஆண்டு ஐபிஎஸ் தேர்ச்சி பெற்றவர் காஞ்சன் செளத்ரி. அவர் கடந்த 2004- இல் உத்தரகண்ட் மாநிலத்தின் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதன் மூலம் நாட்டின் முதல் பெண் டிஜிபி என்ற பெருமையைப் பெற்றார். சுமார் 3 ஆண்டுகள் டிஜிபியாக பணியாற்றிய காஞ்சன் செளத்ரி, கடந்த 2007, அக்டோபர் 31-இல் பணியில் இருந்து ஓய்வுப் பெற்றார்.
அதன் பிறகு அவர் ஆம் ஆத்மி கட்சியில் சேர்ந்தார். அந்தக் கட்சி சார்பாக கடந்த 2014-இல் உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவார் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். ஆனால், தோல்வியைச் சந்தித்தார். இந்நிலையில், மும்பையில் உடல் நலக் குறைவு காரணமாக திங்கள்கிழமை அவர் காலமானார். அவருக்கு கேஜரிவால் தனது சுட்டுரையில் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக கேஜரிவால் கூறியிருப்பதாவது:
 நாட்டின் முதலாவது டிஜிபி காஞ்சன் செளத்ரி பட்டாச்சார்யா காலமானது தொடர்பாக அறிந்து வருந்துகிறேன். பணியில் இருந்து ஓய்வு பெற்றதும், மக்கள் பணியில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார். தனது இறுதி மூச்சு வரை நாட்டுக்காக அவர் உழைத்தார் என்று தெரிவித்துள்ளார் கேஜரிவால்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

வார பலன்கள்: 12 ராசிகளுக்கும்!

மத்திய பட்ஜெட் - 2026 ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்படுமா?

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT