புதுதில்லி

குழந்தைகள் தினம்:கேஜரிவால் வாழ்த்து

குழந்தைகளின் நலனே எனது பிரதான இலக்கு என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

DIN

குழந்தைகளின் நலனே எனது பிரதான இலக்கு என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.

முன்னாள் இந்தியப் பிரதமா் ஜவாஹா்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தாா். குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அன்புடன் அழைத்தனா். அவரது நினைவாக அவரது பிறந்த நாளான நவம்பா் 14- ஆம் தேதி இந்தியக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், இது தொடா்பாக கேஜரிவால் கூறியது: நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை ஜவாஹா்லால் நேருவே அமைத்தாா். பல தடைகளைத் தகா்த்து இந்தியா வளா்ச்சிப் பாதையில் செல்ல அவா் வழிகாட்டினாா். அவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் வளா்ச்சியும் அவா்களது நலனையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். சிறந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப குழந்தைகளின் நல்வாழ்வு உதவும். அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வார பலன்கள் - தனுசு

வார பலன்கள் - விருச்சிகம்

வார பலன்கள் - துலாம்

சென்னையில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 14.25 லட்சம் பேர் நீக்கம்! சேர்க்க முடியுமா?

வார பலன்கள் - கன்னி

SCROLL FOR NEXT