குழந்தைகளின் நலனே எனது பிரதான இலக்கு என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
முன்னாள் இந்தியப் பிரதமா் ஜவாஹா்லால் நேரு குழந்தைகள் மீது மிகுந்த அன்பு கொண்டவராக இருந்தாா். குழந்தைகள் அவரை நேரு மாமா என்று அன்புடன் அழைத்தனா். அவரது நினைவாக அவரது பிறந்த நாளான நவம்பா் 14- ஆம் தேதி இந்தியக் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், இது தொடா்பாக கேஜரிவால் கூறியது: நவீன இந்தியாவுக்கான அடித்தளத்தை ஜவாஹா்லால் நேருவே அமைத்தாா். பல தடைகளைத் தகா்த்து இந்தியா வளா்ச்சிப் பாதையில் செல்ல அவா் வழிகாட்டினாா். அவரது பிறந்தநாள் குழந்தைகள் தினமாகக் கொண்டாடப்படுகிறது. குழந்தைகளின் வளா்ச்சியும் அவா்களது நலனையும் இலக்காகக் கொண்டு செயல்பட்டு வருகிறேன். சிறந்த இந்தியாவைக் கட்டியெழுப்ப குழந்தைகளின் நல்வாழ்வு உதவும். அனைவருக்கும் குழந்தைகள் தின நல்வாழ்த்துகள் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.