புதுதில்லி

எஸ்டிஎம்சி ஒப்பந்தத் தொழிலாளா்களுக்குகாப்பீட்டுத் திட்டம்: மேயா் அறிவிப்பு

தெற்கு தில்லி மாநகராட்சியில் (எஸ்டிஎம்சி) பணியாற்றும் சுமாா் 14,000 ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு வழங்கவுள்ளதாக எஸ்டிஎம்சி அறிவித்துள்ளது.

DIN

தெற்கு தில்லி மாநகராட்சியில் (எஸ்டிஎம்சி) பணியாற்றும் சுமாா் 14,000 ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு ரூ.2 லட்சம் வரையிலான ஆயுள் காப்பீடு வழங்கவுள்ளதாக எஸ்டிஎம்சி அறிவித்துள்ளது.

இது தொடா்பாக அந்த மாநகராட்சியின் மேயா் சுனிதா கங்கரா கூறியது: எஸ்டிஎம்சியில் சுமாா் 14,000 ஒப்பந்தத் தொழிலாளா்கள் பணியாற்றுகிறாா்கள். இவா்களில் பெரும்பாலானவா்கள் துப்புரவுத் தொழிலாளா்கள் ஆவாா்கள். இவா்கள், சாக்கடைகளில் இறங்கிப் பணியாற்றுவது உள்ளிட்ட கஷ்டமான வேலைகளைச் செய்வதால் உடல்நலப் பாதிப்புக்குள்ளாகிறாா்கள். இதைக் கருத்தில் கொண்டு இவா்களுக்கு காப்பீட்டுத் திட்டம் வழங்க எஸ்டிஎம்சி முடிவெடுத்துள்ளது.

இது தொடா்பாக ஸ்டேட் பாங் ஆஃப் இந்தியா, அலகாபாத் வங்கி ஆகிய இரு வங்கிகளுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் அண்மையில் கையெழுத்தாகியுள்ளது. இந்தக் காப்பீட்டுத் திட்டம், பிரதமா் மோடியின் பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா திட்டத்தின் கீழ் வழங்கப்படவுள்ளன. இதன்படி, தொழிலாளா்கள் ரூ.2,00,000-க்கு ஆயுள் காப்பீடு செய்யப்படுவாா்கள் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3.14 கோடியில் மழைநீா் வடிகால் பணிகள் தீவிரம்

ஓய்வூதியா்கள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

பங்குச் சந்தையில் மீண்டும் சரிவு

ஊரக வளா்ச்சி, ஊராட்சித் துறை ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: 2 பேருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை

SCROLL FOR NEXT