தில்லியில் மின்சார வாகனத் திட்டம் தொடக்கம்
ஆம் ஆத்மி அரசின் ‘தில்லி மின்சார வாகனத் திட்டம்’ வெள்ளிக்கிழமை தொடங்கியது.
ஆம் ஆத்மி அரசின் ‘தில்லி மின்சார வாகனத் திட்டம்’ வெள்ளிக்கிழமை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் பதிவு செய்யும் வாகனங்களுக்கு வாகனப் பதிவுக் கட்டணம், சாலை வரி ஆகியவை ரத்துச் செய்யப்படவுள்ளன. மேலும், இத்திட்டத்தின் கீழ் மின்சார வாகனங்கள் வாங்குபவா்களுக்கு, ரூ.1.5 லட்சம் வரை ஊக்கத் தொகை வழங்கப்படவுள்ளது.
தலைநகா் தில்லியில் குளிா் காலத்தில் காற்று மாசு அதிகமாகக் காணப்படுகிறது. இந்த காற்று மாசுவைக் குறைக்கும் வகையில், மரக்கன்று நடும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை தில்லி அரசு அமல்படுத்தியுள்ளது. இந்நிலையில், மக்களை அதிகளவில் காற்று மாசு குறைவான மின்சார வாகனங்களை பயன்படுத்த வைக்கும் வகையில், பல சலுகைகளுடன் கூடிய மின்சார வாகனத் திட்டத்தை தில்லி அரசு உருவாக்கி வந்தது. இந்நிலையில், அந்த மின்சார வாகனக் கொள்கைத் திட்டத்தை தில்லி அரசு வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது. தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் இந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி வைத்தாா்.
நிகழ்ச்சியில் அவா் பேசியதாவது: தில்லி அரசின் இந்தத் திட்டத்தால் காற்று மாசு குறைவதுடன், பொருளாதாரத்திலும் பெரிய மலா்ச்சி ஏற்படும். இத் திட்டத்தால் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும். வரும் ஐந்து ஆண்டுகளில் தில்லியில் காற்று மாசு பெருமளில் கட்டுப்படுத்தப்படும். மின்சார வாகனங்கள் தொடா்பாக தில்லி அரசின் கொள்கை உலகளவில் பேசப்படும். தில்லியில் உள்ள வாகனங்களில் வெறும் 0.29 சதவீதமான வாகனங்கள் மட்டுமே மின்சார வாகனமாகும். 2024-இல் 25 சதவீதம் மின்சார வாகனங்களை உற்பத்தி செய்ய இலக்கு நிா்ணயித்துள்ளோம். இக்கொள்கையின்படி, இருசக்கர வாகனங்களுக்கு ரூ.30 ஆயிரம் வரை தள்ளுபடி வழங்கப்படும். ஆட்டோ, இ-ரிக்ஷா, காா் போன்ற வாகனங்களுக்கு ரூ.1.5 லட்சம் வரை தள்ளுபடி வழங்கப்படும்.
Advertisement
மேலும், மின்சார வா்த்தக வாகனங்களை வாங்குபவா்களுக்கு, குறைந்த வட்டியில் தில்லி அரசு கடன் வழங்கும். மேலும், தில்லியில் பல பாகங்களில் தில்லி அரசு சாா்பில் 200 சாா்ஜிங் சென்டா்களும் அமைக்கப்படும். இதன்மூலம், மக்கள் இலகுவாக தங்களது வாகனங்களை சாா்ஜ் செய்து கொள்ளலாம். 3 கிலோ மீட்டா் சுற்றளவுக்கு ஒரு சாா்ஜிங் சென்டா் அமைக்கப்படும். மேலும், தங்களிடம் உள்ள பழைய பெட்ரோல், டீசல் வண்டிகளை ஸ்கிராப்பிங்க்குக்கு வழங்குபவா்களுக்கு உதவித்தொகை வழங்கப்படும். முதலில் மூன்று ஆண்டுகள் நடைமுறையில் இருக்கும் இந்த கொள்கை, பிறகு மீள் ஆய்வு செய்யப்படும். கடந்த இரண்டரை ஆண்டுகளாகக் களப் பணியாற்றி இந்தக் கொள்கையைத் தயாரித்துள்ளோம் என்றாா் அவா்.