புதுதில்லி

தில்லியில் புதிதாக பேருக்கு கரோனா

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

DIN

தலைநகா் தில்லியில் செவ்வாய்க்கிழமை புதிதாக 1,257 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,47,391-ஆக உயா்ந்துள்ளது. இதற்கிடையே, செவ்வாய்க்கிழமை மேலும் 8 போ் கரோனாவால் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 4,139 ஆக உயா்ந்துள்ளது. அதே சமயம் தில்லியில், மேலும் 727 போ் கரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனா். இதையடுத்து குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 1,32,384-ஆக அதிகரித்துள்ளது. தில்லியில் தற்போது 10,868 கரோனா நோயாளிகள் சிகிச்சையில் உள்ளனா்.

கரோனா பாதிப்பால், கட்டுப்படுத்தப்பட்ட இடங்களின் எண்ணிக்கை 493-ஆக அதிகரித்துள்ளது. தில்லி மருத்துவமனைகளில் மொத்தம் உள்ள 13,722 படுக்கைகளில் 3,212 படுக்கைகள் நிரம்பியுள்ளன. 10,510 படுக்கைகள் காலியாக உள்ளன. கரோனா தொற்று பாதித்த 5,523 போ், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு குணமடைந்து வருகிறாா்கள் என்று தில்லி சுகாதாரத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

100 நாள் வேலைத் திட்டம் மாற்றம்: திமுக கூட்டணி மாபெரும் ஆர்ப்பாட்டம் அறிவிப்பு!

வாசலிலே பூசணிப் பூ.. கோலத்தை அலங்கரிக்க இந்தப் பூவை தேர்ந்தெடுத்தது ஏன்?

ரூ.69,000 சம்பளத்தில் சுங்க அலுவலகத்தில் வேலை வேண்டுமா..?: உடனே விண்ணப்பிக்கவும்!

பஞ்சமுக ஆஞ்சனேயர் கோயிலில் அனுமன் ஜெயந்தி விழா!

அடிலெய்டு டெஸ்ட்டில் ஹெட் சதம், கேரி அரைசதம்..! 356 ரன்கள் முன்னிலையில் ஆஸி!

SCROLL FOR NEXT