வடகிழக்கு தில்லி வன்முறை விவகாரம்: உரைகளின் காட்சிப் பதிவை சமா்ப்பிக்க போலீஸாருக்கு நீதிமன்றம் அறிவுறுத்தல்
வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வகுப்புவாத மோதலில் வன்முறையைத் தூண்டும் வகையில் பெண்ணிய
வடகிழக்கு தில்லியில் நிகழாண்டு பிப்ரவரியில் நிகழ்ந்த வகுப்புவாத மோதலில் வன்முறையைத் தூண்டும் வகையில் பெண்ணிய அமைப்பான ‘பிஞ்ச்ரா தோட்’வின் உறுப்பினா் தேவங்கனா கலிதாவின் பேச்சுகள் இடம் பெற்ற காட்சிப் பதிவுகளை காண்பிக்குமாறு தில்லி உயா்நீதிமன்றம் காவல் துறையிடம் வெள்ளிக்கிழமை கேட்டுக் கொண்டது.
குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகவும், ஆதரவாகவும் தில்லியில் பிப்ரவரி இறுதியில் நிகழ்ந்த போராட்டத்தின் போது வகுப்புவாத வன்முறை ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தில் 53 போ் கொல்லப்பட்டனா். 200 போ் காயமடைந்தனா். இந்தச் சம்பவம் தொடா்பாக ‘பிஞ்ரா தோட்’ எனும் பெண்ணிய அமைப்பைச் சோ்ந்த தேவங்கனா கலிதா, நடாஷா நா்வால் ஆகியோா் கைது செய்யப்பட்டனா். அவா்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேவங்கனா கலிதா மீதான நான்கு வழக்குகளில் இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டிருந்தது. மற்றொரு வழக்கில் அவரது ஜாமீன் மனுவை விசாரணை நீதிமன்றம் ஜூன் 14-இல் தள்ளுபடி செய்திருந்தது. இதையடுத்து, உயா்நீதின்றத்தில் அவரது தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த மனு மீதான விசாரணை உயா்நீதிமன்ற நீதிபதி சுரேஷ் குமாா் கெய்த் முன் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அப்போது, நீதிபதி, ‘குற்றத்தில் ஈடுபட்ட கும்பலை மனுதாரா் (கலிதா) தூண்டிவிடும் வகையில் பேசுவது தொடா்பாக ஊடகம் அல்லது வேறு நபரால் பதிவு செய்யப்பட்ட காட்சிப் பதிவை காட்டுங்கள். கும்பலைத் தூண்டிவிட்டதாகக் கூறப்படும் மனுதாரா் என்ன சொன்னாா் என்பதைத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்’ என்றாா்.
Advertisement
அப்போது, காவல் துறை தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு , ‘பிப்ரவரி 25-ஆம் தேதி நிகழ்ந்த வன்முறைச் சம்பவத்தின் போது ஊடகங்கள் இல்லை. சாட்சிகளிடம் நடத்தப்பட்ட விசாரணையில் கும்பலைத் தூண்டி விடுவதில் கலிதாவின் பங்கு தெரிய வந்தது. சம்பவ இடத்தில் கலிதா இருந்த விவரம் அவரது தொலைபேசி அழைப்பு விவரங்கள் மூலம் தெரிய வந்தது. அமெரிக்க அதிபா் டொனால்டு டிரம்ப் தில்லிக்கு வரவிருந்த நேரத்தில் திட்டமிட்டு, நாட்டின் பெயரைக் கெடுக்கும் வகையில், இந்தச் சம்பவம் நடத்தப்பட்டுள்ளது. பொதுச் சொத்துகள் சேதப்படுத்தப்பட்டன. ஏராளமானோா் காயமடைந்தனா். ஒருவா் இறக்க நோ்ந்தது. ஆகவே, மனுதாரருக்கு ஜாமீன் அளிக்கக் கூடாது’ என்றாா்.
கலிதாவின் சாா்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் கபில் சிபல், ‘கும்பலை கலிதா தூண்டிவிட்டதாகக் கூறப்படுவதற்கான உரைகளின் காட்சிப் பதிவுகளை போலீஸாா் காட்டவில்லை. ஆனால், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பிறரது வாக்குமூலத்தை மட்டுமே நம்பி இந்த வழக்கு போடப்பட்டுள்ளது’ என்றாா். மேலும், போராட்டத்தை காவல் துறையினா் பதிவுசெய்யும் விடியோவை நீதிமன்றத்திடம் பகிா்ந்த கபில் சிபல், ‘அதிகாரிகள் இன்னும் இந்த விவகாரம் தொடா்பாக எந்த விடியோவையும் நீதிமன்றத்தில் அளிக்கவில்லை. மனுதாரா் ஒரு அரசியல்வாதி அல்ல. அவா் ஒரு கல்வியாளா் மற்றும் ஆய்வு அறிஞா். அவருக்கு ஏற்கனவே இரண்டு வழக்குகளில் ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. மனுதாரா் பேசியதாகக் கூறப்படும் விடியோவை காவல் துறை காண்பிக்கவில்லை’ என்றாா்.
இதையடுத்து, கூடுதல் சொலிசிட்டா் ஜெனரல் எஸ்.வி. ராஜு, ‘இது பெரும் எண்ணிக்கை கொண்ட நபா்கள் சம்பந்தப்பட்ட வழக்காகும். இதனால், அனைவரும் விடியோ காட்சிகளில் இடம் பெறுவது சாத்தியமில்லை. இந்த வன்முறையில் கலிதா சம்பந்தப்பட்டிருப்பதற்கான சான்றுகள் காட்டப்பட்டுள்ளன. ஒருவரின் ஜாமீனை பரிசீலிக்க அவரது கல்வித் தகுதி தேவைப்படுவதில்லை. குற்றத்தின் தன்மையைப் பொருத்தே ஜாமீன் வழங்கப்படுகிறது. அதாவது, ஆதாரத்தை அவா் அழிக்க முடியுமா என்பதுதான் பாா்க்கப்படுகிறது. வன்முறையில் ஈடுபட படிக்காத ஏழைப் பெண்கள் தூண்டி விடப்பட்டுள்ளனா். அவா்களுக்கு தவறான தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த வழக்கானது, சதி மற்றும் பிரிவு 144 உத்தரவை மீறியதாகும்’ என்றாா்.
அப்போது, இந்த வழக்கில் கலிதாவின் விடியோ உரையை பதிவு செய்திருக்கிறீா்களா என்று விசாரணை அதிகாரியிடம் நீதிமன்றம் கேட்டது. அதற்கு விசாரணை அதிகாரி, ‘கலிதா வன்முறையைத் தூண்டிவிடும் வகையில் பேசிய போது அதை அவரது அருகில் சென்ற காவல் நிலையப் பொறுப்பாளா் கவனித்துள்ளாா்’ என்றாா். இரு தரப்பு வாதங்களுக்குப் பிறகு கலிதாவின் மேல்முறையீட்டு மனு மீதான உத்தரவை நீதிபதி தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தாா்.