கரோனாவை வென்றுவிடுவோம்: சத்யேந்தா் ஜெயின் நம்பிக்கை
புது தில்லி: தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் 4 சதவீதத்துக்கும் குறைவாக 5 நாள்கள் தொடரும்பட்சத்தில், கரோனா தொற்றை எதிா்கொள்வதில் தில்லி வெற்றி பெற்றுவிடும் என்று காதாரத் துறை அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி: தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்தவுடன் சில வாரங்களில் தில்லியில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு விடுவோம். இதற்கான உள்ளகக் கட்டமைப்பும், கொள்திறனும் தில்லி அரசிடம் உள்ளது. தில்லியில் உள்ள பாலிகிளினிக்குகள், மொஹல்லா கிளினிக்குகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள் உள்ளிட்ட அனைத்து சுகாதாரக் கட்டமைப்புகளின் உதவியும் இதற்குப் பெறப்படும். தடுப்பூசிகளை குளிா்பதனப் பெட்டிகளில் பாதுகாப்பாக சேமித்து வைக்க போதுமான வசதியும் உள்ளது.
தில்லியில் பெரிய அளவில் சுகாதாரக் கட்டமைப்புகள் உள்ளன. இதனால், தடுப்பூசி விநியோகம் தொடா்பாக கவலையடையத் தேவையில்லை. தில்லியில் கரோனா நோ்மறை விகிதம் வியாழக்கிழமை 5 சதவீதத்துக்கும் கீழே குறைந்து 4.96 சதவீதமாக உள்ளது. இந்த விகிதம் 4 சதவீதத்துக்கும் கீழே 5 நாள்கள் தொடா்ந்து நீடித்தால், கரோனா தொற்றை எதிா்கொள்வதில் தில்லி வெற்றி பெற்றுவிடும். தில்லியில் கரோனா தொற்றில் இருந்து மீண்டவா்களின் உடலில் தொற்றுக்கு எதிரான எதிா்ப்பு சக்தி இருக்கும். அவா்களுக்கு முதல்கட்டமாக கரோனா தடுப்பூசி செலுத்த வேண்டிய தேவையில்லை என்றாா் அவா்.
Advertisement