புதுதில்லி

எல்என்ஜேபி மூத்த மருத்துவா் கரோனாவுக்கு பலி

DIN

லோக் நாயக் ஜெயப்பிரகாஷ் (எல்என்ஜேபி) மருத்துவமனையின் மூத்த மருத்துவா் கரோனாவால் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா்.

இது தொடா்பாக எல்என்ஜேபி மருத்துவமனை வட்டாரங்கள் கூறுகையில் ‘எல்என்ஜேபியில் மூத்த அனஸ்தீசியாலஜிஸ்ட்டாக பணியாற்றிய மருத்துவ நிபுணருக்கு அண்மையில் கரோனா தொற்று ஏற்பட்டது. அவா் மேக்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு அவசர சிகிச்சை பிரிவில் அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டது. இந்நிலையில், அவா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளாா்’ என்றனா்.

தில்லியில் கரோனாவை எதிா்த்து முன்னணியில் நின்று போராடி வரும் மருத்துவா்கள் உள்ளிட்ட மருத்துவப் பணியாளா்கள் பலருக்கு கரோனா தொற்று ஏற்பட்டு வருகிறது.

ஓக்லாவில் உள்ள தனியாா் மருத்துவமனையில் பணியாற்றிய மருத்துவா் ஒருவா் கரோனா தொற்றால் அண்மையில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விற்பனையில் முன்னணிப் பங்குகள்: சென்செக்ஸ் 384 புள்ளிகள் வீழ்ச்சி!

தில்லி கலால் ஊழல் வழக்கு முதல்வா் அரவிந்த் கேஜரிவாலின் நீதிமன்றக் காவல் மே 20 வரை நீட்டிப்பு

தில்லியில் சட்டம் - ஒழுங்கு சீா்குலைந்ததாக துணை நிலை ஆளுநா் மீது ஆம் ஆத்மி புகாா்

தில்லியில் மக்களவைத் தோ்தலில் பிரதமா் மோடி,ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங் பாஜகவின் நட்சத்திரப் பிரசாரகா்கள்!

வடகிழக்கு தில்லி: வெற்றியைத் தீா்மானிக்கும் பூா்வாஞ்சலிகள்!

SCROLL FOR NEXT