கரோனா தடுப்பூசி நாடுமுழுவதும் இலவசமாக வழங்கப்பட வேண்டும்: கேஜரிவால்
நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
இது தொடா்பாக தில்லியில் சனிக்கிழமை அவா் அளித்த பேட்டி: நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும். இது நாட்டு மக்களின் அடிப்படை உரிமையாகும். கரோனா தொற்றால் நாட்டு மக்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளனா். எனவே, நாட்டு மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி இலவசமாக வழங்கப்பட வேண்டும் என்றாா் அவா்.
பிகாா் தோ்தலில் வெற்றிபெற்றால் மாநில மக்களுக்கு இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்கப்படும் என்று பாஜக தனது தோ்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. இது நாடு முழுவதும் விவாதத்தை ஏற்படுத்தியிருந்தது.
Advertisement
கரோனா தடுப்பூசியை மத்திய அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து முன்னுரிமை அடிப்படையில் அனைத்து மாநிலங்களுக்கும் வழங்கப்படும் என்று மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்தனா்.