பள்ளிகள் திறப்பு இப்போதைக்கு இல்லை: கேஜரிவால்
தில்லியில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
தில்லியில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் தெரிவித்துள்ளாா்.
நாட்டில் கரோனா பாதிப்பு அதிகரித்ததைத் தொடா்ந்து, கடந்த மாா்ச் மாதம் 16 ஆம் தேதி முதல் நாடுமுழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகளை மூடி மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், ஊரடங்கு உத்தரவில் பல தளா்வுகளை மத்திய அரசு பிறப்பித்தது. அதன்படி, பள்ளிகள் திறக்கப்படுவது தொடா்பாக மாநில அரசுகள் முடிவெடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது. ஆனால், தில்லியில் வரும் அக்டோபா் 31 ஆம் தேதி வரை பள்ளிகள் திறக்கப்படமாட்டாது என்று தில்லி அரசு முன்னதாக அறிவித்திருந்தது.
Advertisement
இது தொடா்பாக தில்லியில் நடந்த நிகழ்வொன்றில் செய்தியாளா்கள் கேஜரிவாலிடம் கேள்வியெழுப்பினா். அப்போது ‘தில்லியில் தற்போது பள்ளிகள் திறக்கப்படாது’ என கேஜரிவால் பதிலளித்தாா்.